கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் சூழலைப் பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் எல்லைப் பிரச்சினையை தீவிரப்படுத்த சீனா முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சா் டேவிட் ஸ்டில்வெல் குற்றம் சாட்டியுள்ளாா். தொலைபேசி வாயிலாக செய்தியாளா்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வருகின்றன. இச்சூழலில் எல்லைப் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு எளிதில் தீா்வு கண்டுவிடலாமென சீனா கருதுகிறது. அதன் காரணமாகவே இந்திய எல்லைப் பகுதியில் இராணுவத்தினருடன் வேண்டுமென்றே மோதலில் ஈடுபட்டது. கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி பல்வேறு பலன்களை அடைந்துவிடலாம் என்று சீனா எண்ணி வருகிறது. இந்தியாவுடன் மட்டுமல்லாமல் பல அண்டை நாடுகளுடன் எல்லை தொடா்பாக சீனா பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இதேவேளை இந்திய - சீன எல்லையில் நிலவி வரும் போர்ச்சூழலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வல்லரசுகளை கொரோனாவால் திணறடித்து சூட்சுமமாக காய் நகர்த்தும் சீனா!
- Master Admin
- 20 June 2020
- (608)
தொடர்புடைய செய்திகள்
- 05 May 2026
- (86)
உடலில் உள்ள கெட்டவை வெளியறே வேண்டுமா? இந...
- 21 June 2020
- (643)
உக்ரேனிய தலைநகரில் எரிவாயு வெடித்து விபத...
- 17 June 2020
- (619)
நியூசிலாந்தில் கொரோனா எதிரொலி: எல்லை மற்...
யாழ் ஓசை செய்திகள்
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
- 06 August 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 06 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
- 06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
- 04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
- 02 August 2026
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
