கட்டுநாயக்கவில் அமைந்துள்ள நெக்ஸ்ற் (‍NEXT) ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 11 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் நேற்று ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் ஏனைய ஊழியர்களுக்கு நேற்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் இன்று 103 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.