பஞ்சாப் மாநிலத்தின் பதிந்தா மாவட்டம் ஹமிர்கார் கிராமத்தை சேர்ந்தவர் பீந்த் சிங் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 7 வயதில் மகனும், 3 வயதில் மகளும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். பீந்த்சிங், மோட்டார் ரிக்‌ஷாவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்குமுன்பு புற்றுநோய் காரணமாக பீந்த்சிங்கின் மனைவி திடீரென உயிரிழந்தார். மனைவி இறந்ததால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் அவர் சிரமப்பட்டார். இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்த பீந்த் சிங் 3 குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தார். பின்னர் அவர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 3 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.