தற்போது இருக்கும் சூழ்நிலையில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று யாருக்கும் தெரியாது. எப்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் வந்து விட்டது.
துரதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் அப்படிப்பட்ட ஆபத்தான போலியாக நடிப்பவர்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லாமல் இருக்கலாம். இதனால் உங்களின் வாழ்க்கை கூட தலைகீழாக மாறலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, விதிவிலக்காக சிலரிடம் போலியான நபர்களைக் கண்டறியும் திறமை இருக்கும். அதற்கு அவர்களின் ராசியோ அல்லது நட்சத்திரமோ காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் போலி முகம் கொண்டவர்களையும், ஆபத்தான நபர்களையும் எளிதில் அடையாளம் காண்பவர்களாக இருப்பார்களாம். அப்படியானவர்கள் என்னென்ன நட்சத்திரங்களில் பிறந்திருப்பார்கள் என பதிவில் பார்க்கலாம்.
அனுஷம் | அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு புத்தகம் படித்தால் அதனை ஞாபகத்தில் வைத்து அடுத்தடுத்த வேலைகளை செய்யும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவரை பார்த்த முதல் பார்வையிலேயே அவர்கள் எப்படியானவர்கள் என கண்டுபிடித்து விடுவார்கள். |
உத்திராடம் | உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மை மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ரகசியங்களை வெளிக் கொண்டு வர வேண்டும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு விடயத்தையும் அதன் அடிப்படையை தெரிந்து கொண்டு செயற்படும் நபராக இருப்பார்கள். |
பூரட்டாதி | இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நம்பமுடியாத அளவிற்கு இரக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே சமயம் சக்திவாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த உலகில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதனை தனியாக சமாளிக்கும் அவர்களிடம் முகத்திரையுடன் இருந்தால் கண்டுபிடித்து விடுவார்கள். நுட்பமான அறிவு, எதிரில் இருப்பவர்களின் நேர்மையின்மையின் எளிதில் கண்டறிய முடியும். |