வெளிநாடுகளுக்கு செல்லும் பணியார்களுக்கு வழங்கப்படும் பயிற்சியைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக செயலற்ற நிலையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மீண்டும் செயல்படுத்த உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற மாநாடு ஒன்றின் போது அச்சங்கத்தின் தலைவர் கமல் ரத்வத்தே இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டார்.