ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் குணம் கொண்டவர்களாகவும் நேர்மையின் சின்னங்களாகவும் இருப்பார்களாம்.
அப்படி நம்பினோரை இறுதிவரை காப்பாற்றும் உன்னத குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் உறவுகளிடத்திலும் சரி தொழில் விடயங்களிலும் சரி மிகவும் விசுவாச குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கொடுக்கும் வார்த்தையை உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவார்கள். மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டால் இறுதிவரை துணை நிற்பார்கள்.
இவர்களை கண்களை மூடிக்கொண்டு நம்பலாம். இவர்களின் வாழ்கையில் நிச்சயம் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே லட்சியவாதிகளாக இருப்பார்கள். ஆனால் மற்றவர்களை பராமரிக்கும் குணத்தை இயல்பாகவே கொண்டிருப்பார்கள்.
இவர்கள் காதல் உறவில் துணையை மட்டுமல்ல தெரியாதவர்களை கூட ஏமாற்ற வேண்டும் என நினைக்க மாட்டார்கள். இவர்களின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் ஒன்றாகத்தான் இருக்கும்.
இவர்கள் நம்பியவர்களை காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை நம்பினால் எந்த நிலையிலும் கைவிடவே மாட்டார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களை நம்பியவர்களை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்ற நினைக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் எந்த விடயத்தையும் மனபூர்வமாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் நண்பர்கள், உறவினர்கள் ,வாழ்க்கை துணை உட்பட அனைவருக்கும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.