பொதுவாக எமது முன்னோர்கள் பல நம்பிக்கைகளை அக்காலம் முதல் பின்பற்றி வந்தார்கள்.

இதன்படி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் தெய்வ சக்தி அதிகமாக இருக்கும்.

இது போன்ற நாட்களில் நாம் செய்யும் வழிபாடுகளின் முழு பலனை பெற்றுக் கொள்ள முடியும். தான தர்மங்கள் செய்தால் நமக்கு அளவில்லா பலனும் கிடைக்கும்.

அதிலும் குறிப்பாக, அமாவாசை தினங்களில் நாம் செய்யக்கூடிய எந்தவொரு செயலும் எமது முன்னோர்களின் அருளால் சிறப்பாக நடக்கும் என்ற ஐதீகமும் உள்ளது. அப்படியொரு அமாவாசை தான் “தை அமாவாசை”

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில், தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை எதிர்வரும் ஜனவரி மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகின்றது. அந்த நாட்களில் செய்யக்கூடிய பரிகாரங்கள் பற்றி தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.    

ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்- அவசியம் செய்து பாருங்க | Thai Amavasai 2025 Astrology Benefits1. சாபங்கள் மற்றும் தோஷங்களால் அவஸ்தைப்படுவர்கள் அமாவாசை தினங்களில் தானம் செய்யலாம். இது அவர்களுக்கு இருக்கும் சாபங்களை நீக்கி, நிரந்தர தீர்வு கொடுக்கும். அத்துடன் முன்னோர்களின் அருளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

2. எமது முன்னோர்களின் அருள் நமக்கு இருந்துவிட்டால் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியம் வெற்றியை கொடுக்கும். இது வம்சத்திற்கான சிறப்பாக பார்க்கப்படுகின்றது.

ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்- அவசியம் செய்து பாருங்க | Thai Amavasai 2025 Astrology Benefits

3. அமாவாசை தினத்தில் பசு மாட்டிற்கு அகத்திக் கீரையும் காகத்திற்கு சாதமும் வைத்து வந்தால் முன்னோர்கள் நம்முடன் தேவைகளை புரிந்து கொண்டு உதவிச் செய்வார்கள்.

4. அமாவாசை தினங்களில் தானம் செய்து வந்தால் ஜென்ம பாவங்கள் கூட நீங்கும் எனக் கூறப்படுகின்றது.

ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்- அவசியம் செய்து பாருங்க | Thai Amavasai 2025 Astrology Benefits

5. பசு மாட்டிற்கு எள்ளு புண்ணாக்கு வாங்கி கொடுக்க வேண்டும்.அதே போன்று காகத்திற்கு எள்ளை பொடி செய்து அதனுடன் ஏதாவது ஒரு இனிப்பை சேர்த்து உருண்டையாக்கி எள்ளுருண்டையாக தானம் கொடுக்க வேண்டும். இது உங்களுக்கு தேவையான பலனை முழுமையாக கொடுக்கின்றது.