தீபாவளி திருநாள் அன்று அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வரும் விஷேசமாகும்.
மற்ற பண்டிகைகளுக்கு கிடைக்காத முக்கியம் தமிழர்கள் மத்தியில் தீபாவளி பண்டிகைக்கு கொடுக்கப்படுகின்றது. இந்த நாளில் நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்கள் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற விஷேச நாட்களில் நல்ல விடயங்கள் செய்ய வேண்டும் என முன்னோர்கள் கூறுவார்கள். ஏனெனின் நாம் சில எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நேர்மறை மற்றும் செல்வத்தை வீட்டில் நிலைத்திருக்க செய்யலாம்.
அதுவும் குறிப்பாக தீபாவளி என்பது இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியைகொண்டாடும் பண்டிகையாகும் உள்ளது என்பதால் இந்த நாளில் முயற்சிப்பது நன்மையளிக்கும்.
அந்த வகையில், தீபாவளி அன்று சில பொருட்கள் வாங்கினால் வீட்டிற்கு மகிழ்ச்சி, செல்வம் கிடைக்கும். அப்படியான பொருட்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. தந்தேராஸில் மகாலட்சுமி, விநாயகர் சிலைகள் வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும். இது போன்ற பொருட்கள் செழிப்பின் சின்னமாக பார்க்கப்படுகின்றது. இது போன்ற சிலைகளை வாங்கினால் மங்களம் உண்டாகும்.
2. தங்கம், வெள்ளி மற்றும் நாணயங்களை தீபாவளி தினத்தில் வாங்கலாம். இது வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்கும். வணிகத்தில் உள்ளவர்கள் நகைகள், பாத்திரங்கள், பணப்பெட்டிகள் அல்லது பெட்டகங்கள் ஆகிய பொருள்களை வாங்கினால் லாபம் கிடைக்கும். புத்தாண்டில் புதிய வாய்ப்பு கிடைக்கும் என்பார்கள்.
3. தந்தேராஸ் தினத்தில் மகா லட்சுமியின் கோபத்தைத் தணிக்கும் பொருட்களை வாங்கி வைப்பது சிறந்தது. செல்வத்தின் கடவுளான குபேரனைப் போல இவைகளும் செல்வத்தை குவிக்கும் பொருட்களாகும்.