நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சொப்ன சாஸ்திரத்தின்படி நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு. நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும்.
அந்த வகையில் நமக்கு தீராத அதிஷ்டம் தரக்கூடிய சில கனவுகள் பற்றி சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சொப்பன சாஸ்திரம்
கனவுகள் பொதுவாக இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும் இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும் மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும் விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பாழடைந்த கோவில்
ஒரு பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றினால் நீங்கள் ஈடுபடும் செயல்களில் முதலில் சில முட்டுக்கட்டைகள் எதிர்ப்படும்.எதாவது முயற்ச்சிகளில் நீங்கள் ஈடுபடுவதாக இருந்தால் அது பல சவால்களை எதிர்கொள்ளப்போகிறது என அர்த்தம்.
ஆரஞ்சுப் பழம்
கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடல் காயம் உண்டாகலாம். வீண் பழி சுமத்தப்பட்டு பெயர் கெடவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வகை கனவுகள் வந்தால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொலைவான பயணங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இஞ்சி
கனவில் இஞ்சியைக் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். பொதுவாக இந்த கனவு இஞ்சி சாப்பிடுவது இல்லை சமைப்பது எந்த வகையில் கண்டாலும் உங்கள் உடல் ஆரோக்கியம் இல்லாமல் நோய் பிடியில் இருக்கப்போகிறது.எனவே இதுபோன்ற கனவுகள் வந்தால் மிகவும் சுகாதார கட்டுப்பாட்டுடன் இருப்பதுடன் வெளியே செல்வதை குறைத்து கொள்ளுங்கள்.
பசு கன்று ஈனுதல்
பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. இது பல வழியில் துன்பங்கள் வந்தடைய செய்யும். இது போன்ற கனவுகள் வந்தால் எதையும் மீண்டு வரும் சக்தியை மன தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுடன் வீண் பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள்.