ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும்  ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை ,எதிர்மறை குணங்கிளில் பெருதும் தாக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் ஒன்றாக சேர்ந்து இருக்கும் போது அவர்களுக்குள் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருக்கும்.

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Otherஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட இரண்டு ராசியினர் எந்த சூழ்நிலையிலும் ஒத்துபோகவே மாட்டார்கள். இவர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில் மோதல் நிச்சயம் இருக்கும். 

அப்படி கீரியும் பாம்பும் போல் பரம எதிரிகளாக இருக்கும் இரண்டு ராசியினர் யார் யார் என்பது குறித்தும் அவர்களுக்குள் ஒத்துப்போகாததன் காரணம் தொடர்பிலும்  இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

கடகம் மற்றும் விருச்சிகம் 

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் 12 ராசிகள் நான்கு கூறுகளாக பிரிக்கப்பட்டுகின்றன. அனைத்து ராசியினருக்கும்  நீர், பூமி, நெருப்பு மற்றும் காற்று ஆகியவற்றின் தன்மையில்  ஒவ்வொரு தன்மை ஒவ்வொரு ராசியினருக்கு ஒத்திருக்கும்.

அவற்றுள் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகள் நீரின் தன்மையுடன் ஒத்துப்போகக்கூடியதாக இருக்கும். 

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

இவற்றில் கடகம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு இடையில் எப்போதும் ஏதாவது ஒரு வகையில் முறன்பாடு இருந்துக்கொண்டே இருக்கும். 

கடக ராசியில் பிறந்தவர்கள் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் எளிதில் உணச்சிவசப்படக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆனால் விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் இதன் காரணமாக, இந்த இரண்டு ராசியினரின் சேர்க்கை எப்போதும் பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். 

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

வெவ்வேறு குணங்கள் காரணமாக இருவருக்கும் இடையே ஒருபோதும் ஒத்துப்போகாது. விருச்சிக ராசிக்காரர்கள் தங்களை காயப்படுத்துவர்களை குறிவைத்து பழிவாங்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

கடக ராசிக்காரர்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவும் அமையாகவும் இருப்பார்கள். ஆனால் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த  விருச்சிகம் இந்த ராசியுடன் இருக்கும்போது, அவர்களுக்குள் இனம் புரியாத வெறுப்பு மற்றும் முறுகல் நிலை ஏற்படுகின்றது. 

இந்த இரண்டு ராசியினர் எப்போதும் கீரியும் பாம்பும் போல் தான் இருப்பார்கள்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Will Never Match For Each Other

கடக ராசியினரிடமும் இந்த மோசமான குணம் இருக்கும். இருவருமே விட்டுக்கொடுக்காத நிலையில் இருக்கும் இடையில் சண்டை வெடிப்பது உறுதி.

இந்த இரண்டு ராசியினர் நண்பர்களாகவே இருக்க முடியாத போது திருமண உறவில் இந்த இரண்டு ராயினரின் சேர்க்கை மிகவும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.