பொதுவாக பெண்கள் தலையில் பூசி வைத்து,நெற்றியில் குங்குமம் இட்டு வந்து இருந்தால் அவர்கள் பார்ப்பதற்கு மகாலட்சுமி போல் இருப்பார்கள் என்று பலரும் கூறுவார்கள்.

இப்படி இருக்கும் சில பெண்களை பார்த்தாலே லட்சுமி கடாச்சம் நிறைந்திருந்தவர்கள் போல் தோன்றும். அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

நல்ல குணம் கொண்ட மற்றும் அழகான பெண்களை திருமணம் செய்து வரும் வீடு லட்சுமியின் அருள் நிறைந்தவையாக இருக்கும். ஆனால் தற்போது இருக்கும் நவீன மாற்றத்தால் தலையில் பூ சூடி கொள்வது, நெற்றியில் குங்குமம் இடுவது பேஷனாக பார்க்கிறார்கள்.

தற்போது இருக்கும் பெரும்பாலான பெண்கள் தலையில் பூ சூடிக் கொள்வதே இல்லை. மாறாக தலைமுடியை கட்டாமல் தலைவிரி கோலமாக திரிகிறார்கள். இது இந்து கலாச்சாரத்தின் படி பெண்கள் செய்யக் கூடாத ஒன்று.

சாஸ்த்திரம்: தொலைந்து போன அதிர்ஷ்டத்தை மீண்டும் கொண்டு வர பரிகாரம்- பெண்கள் செய்யலாமா? | Benefits Of Applying Flowers On Women S Head

இப்படி பெண்கள் இருக்கும் வீடுகள் தரித்திரம் தாண்டவமாடும். இதனால் தொடர்ந்து வீட்டில் கஷ்டம் ஏற்படலாம்.

அந்த வகையில் சாஸ்த்திரத்தை மதிக்காமல் இருப்பவர்கள் விடும் தவறுகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.

1. பெண்கள் தலைமுடி வாறி பூ வைத்து கொள்வதால் வீட்டிற்கு லட்சுமியின் அருள் கிடைக்கும்.

சாஸ்த்திரம்: தொலைந்து போன அதிர்ஷ்டத்தை மீண்டும் கொண்டு வர பரிகாரம்- பெண்கள் செய்யலாமா? | Benefits Of Applying Flowers On Women S Head2. தலையில் பூ வைப்பது என்பது வெறும் சாஸ்த்திரம் மட்டுமல்ல. இது சில அறிவியல் உண்மைகளும் உள்ளன. அந்த வகையில் பூ வைக்கும் பெண்கள் மண்டை, கழுத்து அருகே பூ வைக்க வேண்டும். ஏனென்றால் அந்த பகுதியில் கூம்பு சுரப்பி (Pineal gland) இருக்கிறது. இந்த சுரப்பி நாம் தலையில் பூ வைக்கும் போது மனம் வரும் மனத்தை உடலுக்குள்ளும், மூளைக்குள்ளும் கொண்டு செல்கிறது. இந்த செயப்பாட்டினால் உடல் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கின்றது. அத்துடன் புது விதமான புத்துணர்ச்சியும் கிடைக்கின்றது.

3. பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு, தலையில் பூ சூடிக் கொள்வதால் அவர்களுக்கு வரும் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது.

சாஸ்த்திரம்: தொலைந்து போன அதிர்ஷ்டத்தை மீண்டும் கொண்டு வர பரிகாரம்- பெண்கள் செய்யலாமா? | Benefits Of Applying Flowers On Women S Head4. ஆன்மீகத்தின் படி பெண்கள் தினமும் தலையில் பூ சூடிக் கொள்ளும் போது மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதனால் உங்களின் வாழ்க்கையில் அத்தனை சௌபாக்கியங்களும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. தலையில் வைக்கும் பூக்கள் மல்லிகை, ரோஸ் ஆகிய மலர்களாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.