பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் சூரியனின் மகனும் கர்மவினை அளிப்பவருமான சனி பகவான் 29 ஜூன் 2024 அன்று இரவு 11:40 மணிக்கு கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.
15 நவம்பர் 2024 வரை, அது பிற்போக்கு நிலையில் உள்ளது. இதற்குப் பிறகு 15 நவம்பர் 2024 அன்று மாலை 05:09 மணிக்கு கும்ப ராசியில் சனி நேரடியாகச் செல்கிறார்.
இந்த பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. அப்படியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. தனுசு ராசியினர்
- சனிபகவான் தனுசு ராசியின் மூன்றாவது வீட்டில் பின்வாங்குகிறார். இந்த யோகத்தால் இவர்களிடம் மன உறுதி அதிகமாகவே இருக்கும்.
- வாழ்க்கையின் இலக்கை அடைய தீவிரமாக முயற்சிப்பார்கள்.
- இவர்களின் உழைப்பில் அதிகமான பணத்தை சம்பாரிப்பார்கள்.
- தீவிர முயற்சியால் இலக்கு கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.
2. மேஷம் ராசியினர்
- மேஷ ராசியின் வருமான வீட்டில் சனி பின்வாங்குகிறார்.
- இவர்கள் சாதிக்க நினைக்கும் துறையில் பல முயற்சிகள் செய்திருப்பார்கள்.
- இதற்கான பலனாக ஆசை கூடிய விரைவில் நிறைவேறும்.
- சிறு வயது முதல் தன்னுடைய ஆளுமை பண்பை வளர்த்துக் கொண்டதால் பணம் சம்பாதிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய வாகனம், வீடு போன்றவற்றை வாங்குவதற்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் நல்ல லாபம் பெறலாம்.
3. கும்ப ராசியினர்
- கும்ப ராசியின் லக்ன வீட்டில் சனிபகவான் பின்வாங்குகிறார். இதனால் தொழில் வெளிநாட்டில் இருந்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
- அவர்களுக்கு இயல்பாகவே ஆற்றல், வீரம், வேகத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
- பணத்தை இலகுவாக சம்பாரித்து விடுவார்கள்.
- கும்ப ராசியினரின் கஷ்டம் கொஞ்ச நாட்களுக்கு தான் இருக்கும்.
- எளிதில் சம்பாதித்து பணக்காரர்களாக மாற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.