சூரியன் தனது நட்சத்திரத்தினை மாற்றுவதால் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தினையும் மாற்றுவார். இவ்வாறான மாற்றத்தின் போது சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்.
அந்த வகையில் தற்போது கடக ராசியில் பயணித்து வரும் சூரியன், ஆகஸ்ட் 02ம் தேதியான இன்று புதனின் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். குறித்த நட்சத்திரம் சக்தி வாய்ந்ததாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுவதால், இதில் வெற்றியை குவிக்குமு் 3 ராசியினரை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
இந்த சூரிய பெயர்ச்சியானது மேஷ ராசியினருக்கு மரியாதையும், மதிப்புமு் அதிகரிப்பதுடன், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அலுவலக பணிகளில் இருப்பவர்கள் தங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இலக்குகளை எளிதில் அடைவார்கள். முக்கியமாக செய்யும் காரியங்களில் வெற்றியும், திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டத்தைத் தரப் போகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் தலைமைப் பண்புகள் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம்.
குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது மங்களகரமானதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றிகளும், லாபமும் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.
நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். முக்கியமாக நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.