தமிழ் சினிமாவின் தங்களது நகைச்சுவையின் மூலம் எக்கச்சக்க ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணி. 80 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் நகைச்சுவையால் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர்கள்.
ஒரு சில காமெடி காட்சிகள் காலங்கள் கடந்தும் இன்றும் பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்படும் காமெடியாக இருக்கிறது. இந்நிலையில் இவர்களுடன் நடித்துள்ள நடிகை அனுஜா ரெட்டி அளித்த பெட்டி ஒன்றில்,
சினிமாவுக்கு வந்த புதிதில் என்னுடைய சக நடிகர்கள், நடிப்பதில் நிறைய உதவி செய்து இருக்கிறார்கள். செந்தில் சார் ரொம்ப நல்லவர், ஹெட் வெயிட் இல்லாதவர். கவுண்டமணி கூட நல்லவர் தான்.
ஆனால் கவுண்டமணி ரொம்ப ஆட்டிடியூட் காட்டுவார். செந்தில் சார் அப்படி இல்லை. கவுண்டமணி கிட்ட நிறைய திறமைகள் இருக்கிறது. ஸ்பாட்டில் நிறைய விஷயங்களை செய்வார். அதனால் தான் அவர் அவ்ளோ பேசப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.