தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.
பாராட்டு பெறும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் விஜய், ஒரு மாணவியின் தொழில் தோளில் சால்வை அணிவித்து அவரின் தோள் மீது கை வைத்தார். திடீரென்று அந்த மாணவி விஜய்யிடம் கோரிக்கை வைத்தபடி தனது தோள் மீது இருந்த அவரது கையை எடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் விஜய்யின் கையை கோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் புன்சிரிப்புடன் போஸ் கொடுத்தார்.