தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு  சிகிச்சை பெற்று வந்த 4கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம், ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரவிக்கின்றன.

தெலுங்கானா மாநிலம்- சார்லபள்ளி சிறையிலுள்ள கைதிகள் 4பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும்,  செகந்திராபாத்திலுள்ள காந்தி  வைத்தியசாலையிலுள்ள கொரோனா சிறப்பு  பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில்,கைதிகள் 4 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில்  வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த நான்கு பேரையும், தேடும் நடவடிக்கையில், பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும். இந்த விடயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஆணையாளர் அஞ்சனி குமார் தெரிவித்துள்ளார்.