தேசிய அளவில் ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய அரசின் கொள்கைத் திட்டங்களை வகுக்கும் நிதி ஆயோக் அமைப்பு போட்டித்திறன் மையத்துடன் இணைந்து, ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ள மாநிலங்களின் குறியீட்டு பட்டியலை தயாரித்துள்ளது.
இதன்படி, கடலோர மாநிலங்களான குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
அரசு கொள்கை, வர்த்தக நிலைவரம், ஏற்றுமதிச் சூழல், ஏற்றுமதி செயற்பாடு ஆகிய 4 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், மாநிலங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, மாநில அரசுகள் ஏற்றுமதியை மேம்படுத்த தனி துறையை ஒதுக்க வேண்டும் எனவும், வரும் ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.