ஜோதிட சாஸ்திரம் மற்றும் எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவருடைய எதிர்காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் எல்லா விடயங்களும் சரியாக இருந்தாலும் கூட மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியாதவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எந்த விடயத்திலும் முழுமையாக திருப்தியடையாதவர்களாக இருப்பார்கள்.எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

எண் 8 (அனைத்து மாதத்திலும் 8, 17, 26 ஆகிய திகதி)

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா? | Born On These Dates Are Always Dissatisfied

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாக இருக்கின்ற போதிலும் மற்றவர்களுடன் அடிக்கடி தங்களை ஒப்பிடும் குணம் இவர்களுக்கு  இருப்பதால் ஒருபோதும் திருப்திகரமாக வாழ்வை வாழவே முடிவதில்லை. இவர்கள் எவ்வளவு நல்ல வாழ்வை வாழ்ந்தாலும் இவர்களின் மனதை திருப்திப்படுத்துவது மிகவும் கடினமான விடயமாக இருக்கும். 

எண் 2 (அனைத்து மாதத்திலும் 2, 11, 20, 29 ஆகிய திகதி)

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா? | Born On These Dates Are Always Dissatisfied

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் முடிவெடுப்பதில் மிகவும் சிரமப்படுபவர்களாக இருப்பார்கள். அந்த குறை இவர்களிடம் இருப்பதை இவர்கள் உணர்ந்தாலும் அதனை ஒத்துக்கொள்ள, இவர்களின் மனம் இடம்கொடுக்காது. இதனால் இவர்கள் மற்றவர்கள் மீது புகார் சொல்லும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இவர்களின் கண்களுக்கு எப்போதும் ஒன்றைவிட மற்றொன்று சிறந்ததாக தெரியும். இதனால் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

எண் 7 (அனைத்து மாதங்களிலும் 7, 16, 25 ஆகிய திகதி)

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா? | Born On These Dates Are Always Dissatisfiedஇந்த திகதிகளில் பிறந்தவர்கள் சுயபரிசோதனை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களின் நிலையை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியானதாக இருந்தாலும் அதனை அவர்களால் அனுபவித்து வாழ முடியாத நிலை ஏற்படும். 

எண் 5(அனைத்து மாதத்திலும் 5, 14, 23 ஆகிய திகதி)

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா? | Born On These Dates Are Always Dissatisfiedஇந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமான மற்றும் துணிச்சலானவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் மனம் எப்போதும் அமைதியற்ற நிலையில் இருப்பதால் இவர்களால் ஒரு விடயத்தில் கவனத்தை செலுத்த முடியாமல் இருக்கும். இதனால் வாழ்வில் ஏற்படும் சின்ன சின்ன துன்பங்களுக்கும் கூட  வாழ்க்கையை வெறுக்கும் குணம் இவர்களிடம் காணப்படும்.