தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த நல்ல சிவப்பு நடிகை ஒருவர் செய்த கூத்தைதான் இப்போது பார்க்க போகிறோம். அவர் கூட நடித்த அனைத்து நடிகர்கள் கூடவும் கிசுகிசுக்கப்பட்ட கொஞ்சம் சர்ச்சையான நடிகை இவர்.

20 வயதிலேயே சினிமாவிற்கு வந்த இந்த நடிகை பலருடன் கிசு கிசுக்கப்பட்டாலும் ஒரு தொழிலதிபருக்கும் இவருக்கும் இருந்த உறவுதான் கொஞ்சம் பிரபலம் என்று கூறலாம். அந்த தொழிலதிபர் வம்ச வம்சமாக கோடீஸ்வரர் எல்லாம் கிடையாது.

ஏழையாக இருந்த அவர் சென்னைக்கு வந்து சின்ன வியாபாரம் செய்து தற்சமயம் பெரும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இந்த நடிகையை அவருக்கு அதிகமாக பிடிக்கவே அவரது திரைப்படங்களை பார்த்து ஆசையை வளர்த்து வந்துள்ளார் தொழிலதிபர்.

இந்த நிலையில் தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி நடிகையிடம் கோரிக்கை வைத்துள்ளார் தொழிலதிபர். ஆனால் அந்த நடிகை அதை மறுத்துள்ளார். ஆனால் தொழிலதிபர் அவரை விடுவதாக இல்லை. வாரா வாரம் புது புது ஆடைகளை நடிகைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதே போல மாதா மாதம் புது புது நகைகளை அனுப்பியுள்ளார். இதனையடுத்து மனம் மாறிய நடிகை அவருடன் பழக துவங்கியுள்ளார். இதற்கு நடுவே நடிகைக்கு ஏற்பட்ட இக்கட்டான பண நெருக்கடியில் இருந்து நடிகையை காப்பாற்றியுள்ளார் தொழிலதிபர்.

இதனால் தொழிலதிபர் மீது நடிகைக்குமே ஈடுபாடு வர துவங்கியுள்ளது. இருவரும் உல்லாசமாக இருக்க துவங்கியுள்ளனர். ஆனால் சேர்ந்து இருக்க துவங்கியப்பிறகு அந்த நடிகைக்கு விதிமுறை ஒன்றை போட்டுள்ளார் தொழிலதிபர்.

நீ எப்போதும் என்னோடுதான் சேர்ந்து இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். நடிகையும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் நான்கு வருடங்களாகவே உறவு இருந்து வந்துள்ளது.

இதனையடுத்து இவர்கள் கள்ளதொடர்பு வெளியில் எப்படியோ பரவ துவங்கியது. இதற்கு நடுவே நடிகர்கள் கூட நெருங்கி கூட இனி நீ நடிக்க கூடாது என நடிகைக்கு விதிமுறை போட்டுள்ளார் தொழிலதிபர். இது நடிகையின் திரை வாழ்க்கையே பாதிக்கும் என்பதால் அதற்கு நடிகை மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தொழிலதிபருடன் பிரச்சனை ஏற்பட அவரை கை கழுவிவிட்டார் அந்த நடிகை. தற்சமயம் வேறு ஒரு நடிகரை திருமணம் செய்துக்கொண்டு குழந்தை குட்டி என வாழ்ந்து வருகிறார் இந்த நடிகை.