உடலிகிலேயே இரவு நேரத்தில் மட்டும் இயற்கையாக நீல நிறத்தில் ஒளிரக்கூடிய பயோலுமினசென்ட் கடற்கரையை பற்றி முழு விபரம் பற்றி இந்த பதிவில் பார்கலாம்.
இரவின் இருளில், நீல நிறத்தில் மினுங்கும் கடல் அலைகளை பார்க்கும் காட்சி காணக்கிடைக்காதது. இது சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகும்.
இது ஜப்பானில் ஹோன்ஷுவின் ஹொகுரிகு பகுதியின் வடக்குக் கரையில் அமைந்துள்ள டோயாமாவில் உள்ளது. இது பகலில் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் இரவில் இது நீல நிறத்தில் ஒளிர்கின்றது.
அதாவது அந்த கடற்கரையில் நாம் மண்ணில் கால் மிதிக்கும் போதும் கடலில் குளிக்கும் போதும் இந்த கடற்கரை நீல நிறத்தில் ஒளிர்கிறது.
இதற்கான காரணம் ஃபயர்ஃபிளை ஸ்க்விட்' எனப்படும், கணவாய் மீன்கள் தங்கள் மீது ஏதாவது தொடுகையை உணரும் போது இது
தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த நுட்பத்தை பயன்படுத்துகிற இதன்போது இது வெளிவிடும் ஒளி தான் இந்த கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிரச்செய்து அழகாக காட்சி தருகின்றது.
இந்த மீன்கள் பொதுவாக கண்களுக்கு புலப்படாது. இந்த மீன்கள் ஜப்பானில் ஒரு சுவையான மீனாக உண்ணப்படுகிறது. இந்த இடத்திற்கு சுற்றுலா செல்லும் போது அதிகளவில் செலவு வருவதற்கு வாய்ப்பு இல்லை.
இந்த கடற்கரையை இரவில் இலவசமாக பார்வையிட்டு வர முடியும். உடகில் இதுபோன்ற அதியமான இடங்கள் இன்னும் காணப்படுகின்றன.