நாம் செய்யும் வேலை எனும் ரீதியில் அது எமக்கு பிடித்த வேலையாக இருக்க வேண்டும். ஆனால் சமூகத்தின் சில நேர்மறையான எண்ணங்களால் சிலர் சில வேலையை விருப்புவதில்லை.
இதற்கான காரணம் தவறான சமூகமாகும். ஆனால் அதிக சம்பளம் பெறும் வேலைகளாக அந்த வேலைகள் தான் உள்ளது.
உலகளவில் பெரும் சம்பளம் வழங்கப்படும் வேலைகளாக இருப்பினும் சில பணிகளுக்கு மக்கள் செல்ல விரும்புவது இல்லை. அவை என்னென்ன பணிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சுகாதாரப்பணிப்பாளர் வேலையை பலரும் பெரிதாக செய்ய விரும்புவதில்லை. ஆனால் இவர்கள் வேலை செய்யவில்லை என்றால் முழு உலகமும் குப்பையாக மாறிவிடும்.
இது உலக நாடகளில் பல உபகரணத்துடன் இந்த வேலையாட்களுக்கு தனிப்பயிற்சி கொடுக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. இந்த வேலைக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் வருட சம்பளம் உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.40 லட்சமாக உள்ளது.
2.இறைச்சிகூடப்பணிப்பாளர் வேலை செய்வதற்கு எந்த படிப்பறிவும் தேவை இல்லை. இந்த வேலைக்கு 15 டாலர்கள் 1 மணிநேரத்திற்கு கிடைக்கும். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,200 ஆகும்.
3.சிலநாடகளில் இந்த கழிவறை பணிப்பாளர்களை பணிக்கு வைக்காமல் கவனிக்காமல் இருப்பார்கள். ஆனால் சில நாடுகளில் சுத்தம் செய்ய மணிநேரத்திற்கு 15 டாலர்கள் வழங்கப்படுகிறது.
4.கடைசியாக இருக்கக்கூடிய வேலை இதை தைரியமானவர்களால் மட்டுமே செய்ய முடியும். இறந்தவர்களின் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்துவிட்டு, நரம்புகள் வழியாக ஒருவித திரவத்தை செலுத்தி உடலை தயார் செய்ய வேண்டும்.
இந்த தொழிலுக்கு 78,000 டாலர்கள் வரை ஊதியம் உள்ளது. இந்திய மதிப்பில் இது 63 லட்ச ரூபாயாகும்.