இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, பணக்காரர், இருப்பவர், இல்லாதவர் என எதையும் பார்க்காமல் பலரையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவும் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தனர்.

இவர்கள் நால்வரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே ஒரு முறை அமிதாப் பச்சன் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி விட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் அவர் அதனை பொய் என மறுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகிய இருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக நடிகர் அபிஷேக் பச்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரும் அவரது அப்பா அமிதாப் பச்சனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.