பொதுவாகவே நாம் சிலர் நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நல்ல பொருட்களை தினமும் தூக்கி எறிவதுண்டு. அப்படி நீங்கள் தூக்கி எறியும் சில பொருட்களின் எத்தனை நன்மைகள் இருக்கிறதென தெரியுமா?
ஆனால் அவற்றை அறியாமல் நாம் தூக்கி எறிவதால் பல நன்மைகளை இழந்து விடுகிறோம். அந்தவகையில் சாதம் வடித்தப்பின் அந்த கஞ்சியை கீழே எறியாமல் குடித்தால் பல நன்மைகள் பெறலாம்.
சாதம் வடித்த கஞ்சியின் நன்மைகள்
- அரிசி வேக வைத்த தண்ணீரில் கார்போஹைட்ரேட் நிரம்பியிருக்கிறது. இதனை தினமும் காலையில் குடித்தால் அன்றைய நாளில் உங்கள் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
- இந்த சாதம் வடித்த தண்ணீர் நீரிழிவு நோயைக் கூட கட்டுப்படுத்தும்.
- நோய் அல்லது வைரஸ் தொற்றுகள் ஏற்படும் போது சாதம் வடித்த தண்ணீர் சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கிறது.
- தொற்றுக்களில் இருந்து விடுபட்டு உடல் மீள செயல்முறை விரைவுப்படுத்த அரசி தண்ணீர் குடித்தால் போதும்.
- அரிசியில் இருக்கும் நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்தை எளிதாக்கும் மேலும், மலச்சிக்கலை தடுக்கும்.
- அரிசியில் இருக்கும் மா சத்து வயிற்றில் இருக்கும் நல்ல பக்றீரியாக்களின் வளர்ச்சியை தூண்டி ஆரோக்கியமான குடல் இயக்கத்தைக் கொடுக்கும்.
- உடல் எடை குறைவாக இருப்பவர்கள் கஞ்சியை குடிக்கும் போது இதில் இருக்கும் கார்போஹைடிரேட் உடலில் மா சத்தை சேர்த்து உடல் எடையை அதிகரிக்கும்.
- இந்த கஞ்சி உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும், உடல் சூடால் ஏற்படும் முடிப்பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கும்.