யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதுடன் தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32) என்பவரே இவ்வாறு யானையால் தாக்கப்பட்டுள்ளார்.

விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் அப்பகுதியில் நடமாடியுள்ளனர். இதன்போது யானையை அவதானித்த இருவரும் வெவ்வேறு திசைக்கு ஓடியுள்ளனர். இதன்போதே ஒருவரை யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.