டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரியல்லா, பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரில் கதாநாயகியாக அசத்தி வருகிறார்.

ஏற்கனவே நயன்தாராவின் ஐரா படத்தில் நடித்து கலக்கியவர், தற்போது தற்போது என்4 என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கேப்ரியல்லாவுக்கு, கொரோனா தொற்று உறுதியாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் கேப்ரியல்லா, உயிருக்கு போராடி வருவதாக வெளியான தகவலுக்கு இன்ஸ்டாவில் தனது பதிவியினை வெளியிட்டிருந்தார்.

தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்ட அவர், கொரோனாவிலிருந்து மீண்டு வருவதாகவும், செய்திகளில் தலைப்புகளை கொஞ்சம் பார்த்து போடுங்க என்று கூறியதோடு, உறவினர்கள் மிகவும் கவலைபடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.