கொரிய அரசாங்கத்தினால் ஏற்றுமதி - இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின் பொருளாதார அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக சலுகை கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

10 வருட சலுகை காலத்துடன் கூடிய 40 வருட மீள் செலுத்துகை காலமும் குறித்த கடனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.