மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சோ்ந்த ஆண் ஒருவர் வாழைச்சேனை பிரதேச காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
செங்கலடியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் 27 ம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறியுள்ளார்.
பின்னர் குறித்த நபர் வீடு திரும்பாத காரணத்தால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று (09) வாழைச்சேனை முறுத்தானை வயலை அண்டிய காட்டுப் பகுதியில் சடலம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இருப்பதாக அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றவர்களால் வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் கடந்த 27 ம் திகதி காணாமல் போன செங்கலடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போன நபர் 12 நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு
- Master Admin
- 09 May 2021
- (555)

தொடர்புடைய செய்திகள்
- 06 May 2024
- (329)
ரத்தத்தின் சக்கரை அளவை குறைக்கணுமா? அப்ப...
- 01 March 2021
- (386)
சம்பள விவகாரம் – சம்பள நிர்ணயசபை இன்று ம...
- 17 April 2024
- (256)
ஸ்மார்ட் ஃபோனுக்கு அடிமையாகும் 5 ராசியின...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.