பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, காதல், திருமணம், பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்த்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பெண்கள் இயல்பாகவே ஆபத்தான தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் எனவும் இந்த பதிவில் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மை கொண்டவர்களாகவும், அவர்களின் அன்புக்குரியவர்கள் அச்சுறுத்தப்படும்போது பெரும்பாலும் கடுமையாக எதிர்வினையாற்றும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் தங்களின் குடும்பத்துக்காகவும் வாழ்க்கை துணைக்காகவும் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அதுவே இவர்கள் ஒருவரை தங்களின் எதிரி என முடிவு செய்துவிட்டால் அவர்களுக்கு வாழும் போதே நரகத்தை காட்டும் அளவுக்கு ஆபத்தான எதிரியாக மாறிவிடுவார்கள்.
இவர்கள் நண்பர்களுக்கு தலைசிறந்த தோழியாகவும் எதிரிகளுக்கு மிகவும் ஆபத்தான எதிரியாகவும் மாறிவிடுவார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் எந்த விடயத்திலும் முழுமையையும் நேர்த்தியையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் எண்ணப்படி மற்றவர்கள் நடந்துக்கொள்ளவில்லை என்றால், இவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள்.
அவர்கள் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் குணம் அற்றவர்களாக இருப்பதால், மிகச் சிறிய குறைபாடுகளையும் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த குணங்கள் இவர்களை ஆபத்தானவர்களாக மாற்றிவிடுகின்றது.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் சூரியனால் ஆளப்படுவதால், இயற்கையாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால், அவர்கள் கவனிக்கப்படாவிட்டால் அவர்களின் பிடிவாதம் அவர்களை கோபப்படுத்தும்.
இந்த குணம் காரணமாக பல இடங்களில் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில், அதிகமான கோபத்தை வெளிப்படுத்திவிடுவார்கள். இவர்களின் கட்டுப்பாடற்ற நிலை மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.
பொறுமையும் அனைவரின் கருத்துக்களையும் கேட்க்கும் குணமும் இவர்களிடம் சுத்தமாக இருக்காது. இதனால் இவர்கள் மற்றவர்களின் பார்வையில் ஆபத்தானவர்களாக தோன்றக்கூடும்.