கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், பிரபலங்களும் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் நடிகை டெல்னாவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சுந்தரி சீரியல் கேபிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும், அவள் தனது கனவை அடைய எப்படி போராடுகிறாள் என்பதை மையப்படுத்தியும் சீரியலின் கதை அமைந்துள்ளது.
ஆரம்பித்த சில நாட்களிலேயே தாய்குலங்களின் மனங்களை கொள்ளையடித்த இந்த சீரியலில் நடிக்கும் கேப்ரில்லாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர்.
தனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கேபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் ரொம்ப சாதாரணமாக நினைச்சிடாதீங்க மாஸ்க் போடாம வெளிய போகாதீங்க.
பாதுகாப்பாக இருங்க. கடைசியா எனக்கும் கோவிட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு என்று அவர் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதனால் சுந்தரி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேபிரியல்லாவின் இன்ஸ்டா பதிவுக்கு அவரது ஏராளமான ஃபேன்ஸ் கமெண்ட் செய்து வருகின்றனர். “நீங்க இல்லாம வேற யார் நடிச்சாலும் பார்க்கமாட்டோம், சீக்கிரமாக குணமாகி மீண்டும் நல்லபடியாக திரும்பி வருவீர்கள்” “இது போன்ற சமுதாய விழிப்புணர்வுக்கான பதிவுக்கு நன்றி” “போராட்டம் உங்களுக்கு புதிதல்ல மீண்டு வாருங்கள் அக்கா”என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் சீரியலில் காணாமல் போனதாக கதை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா என்று தெரிந்ததும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.