வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரி ஒருவரின் அரச விடுதியில் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள் 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரைப் பவுண் நகை என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்த மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரச அதிகாரி ஒருவரின் வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது
- Master Admin
- 01 May 2021
- (416)

தொடர்புடைய செய்திகள்
- 10 July 2020
- (386)
சிறைக்கைதிகள் தங்குமிடத்தில் 12 கையடக்க...
- 01 May 2025
- (144)
இந்த ராசி பெண்கள் மகாராணி போல் வாழவே பிற...
- 26 March 2025
- (168)
இந்த ராசியில் பிறந்த பெண்கள் மற்றவர்களை...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் ஜூலை முதல் அமுலுக்கு வரும் தடை!
- 25 June 2025
தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்
- 25 June 2025
டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்
- 25 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.