நுவரெலிய, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவகத்தினால் கினிகத்ஹேன பகுதியில் தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொற்றாளர்கள் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றிவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 ஆம் திகதி குறித்த பிசிஆர் பரிசோதனைகள் முன்னிடுக்கப்பட்டிருந்தது.

குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.