ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

வைத்திய சேவைக்காக பயன்படுத்தாத கெட்டன் பட், காற்று நிரப்பு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் உட்பட 6 பொருட்களுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

தற்போதைய விற்பனையில் உள்ள பொருட்களுக்கு அந்த தடை நடைமுறைப்படுத்தபடாது என தெரிவிக்கப்படுகின்றது.