தக்காளியில் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது சில பாதிப்புகளும் உண்டாகும்.
எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அதை அளவுக்கு மீறி உட்கொள்ளும்போது ஆபத்தில்தான் முடியும். அந்த வகையில் தக்காளியில் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது சில பாதிப்புகளும் உண்டாகும். அவை என்னென்ன பார்க்கலாம்.
ஆசிட் எதிர்ப்பு வினை : பொதுவாகவே தக்காளியில் ஆசிட் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது உடலில் ஆசிட் அதிகரித்து நெஞ்சு எரிச்சல், வாயுத்தில்லை , செரிமாணப் பிரச்னை போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
சிறுநீரகப் பிரச்னை : யு.எஸ். சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை அளித்துள்ள ஆய்வுக் குறிப்பில் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் பொட்டாசியம் உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறது. அந்த வகையில் தக்காளியில் பொட்டாசியம் நிறைவாகவே உள்ளது. அதோடு ஒசலேட் அதிகம் உள்ளதால் சிறுநீரக பாதிப்பை சந்திக்க நேரும்.
குடல் எரிச்சல் : ஏற்கனவே குடல் எரிச்சல், குடல் வீக்கம் என குடல் பாதிப்புகள் இருந்தால் தக்காளியை வழக்கத்தை விட குறைவாக பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் நீங்கள் அடிக்கடி வயிற்று மந்தம், அலர்ஜி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மூட்டு வலி : தக்காளியை அதிகமாக உட்கொள்வது சோலனைன் எனப்படும் ஆல்கலாய்டு நிரம்பியிருப்பதால் மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. திசுக்களில் கால்சியத்தை உருவாக்குவதற்கு சோலனைன் உதவியாக இருக்கிறது. எனவே சோலனைன் அதிகரிக்கும்போது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
ஒவ்வாமை : தக்காளியில் ஹிஸ்டமைன் எனப்படும் தோல் வெடிப்பு அல்லது ஒவ்வாமைக்கு வழிவகுக்கும். எனவே, நீங்கள் தக்காளி ஒவ்வாமை இருந்தால், வாய், நாக்கு மற்றும் முகத்தின் வீக்கம், தும்மல் மற்றும் தொண்டை தொற்று போன்றவற்றை அனுபவிக்கலாம். இதற்கிடையில் தக்காளி ஒவ்வாமை தோல் அழற்சியையும் ஏற்படுத்தும். நீங்கள் ஒவ்வாமை இருந்தால் தக்காளியை அதிகம் சாப்பிடுவதன் மூலம் தோலில் கடுமையாக அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.