பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுடன் அந்தரங்கம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமான உறவு இருந்ததாக அமெரிக்க பெண் தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 35 வயதாகும் ஜெனிபர் ஆர்குரி என்பவரே, 56 வயதான போரிஸ் ஜோன்சன் தொடர்பில் குறித்த தகவலை வெளியிட்டவர்.

மட்டுமின்றி, நான்காண்டு காலம் நீடித்த அந்த உறவின் போது, உண்மையாகவே போரிஸ் ஜோன்சன் மீது காதலில் விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 முதல் 2016 வரையான காலகட்டத்தில் தமக்கும் போரிஸ் ஜோன்சனுக்கும் நெருக்கமான உறவு இருந்ததாக ஜெனிபர் ஆர்குரி வெளிப்படுத்தியுள்ளார்.

போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இரண்டாவது முறையாக பதவியில் இருந்தபோது தாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கத் தொடங்கியதாக ஆர்குரி தெரிவித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் போரிஸ் ஜோன்சன் சட்டத்தரணியான மெரினா வீலர் என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.

போரிஸ் ஜோன்சன் மீது தமக்கு உடல் மற்றும் அறிவார்ந்த ரீதியான ஈர்ப்பு ஏற்பட்டது என கூறும் ஆர்குரி, போரிஸ் ஜோன்சனுக்கு ஒரு சந்தேக பெயர் ஒன்றையும் சூட்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல முறை தம்மிடம் அந்தரங்க புகைப்படங்கள் கேட்டு போரிஸ் ஜோன்சன் கெஞ்சியுள்ளார் என தெரிவித்துள்ள ஆர்குரி,

ஆனால் தாம் அவரை ஏமாற்றாமல், கலைத்துவமான புகைப்படங்களை அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் தங்களது உறவு பாதிப்புக்கு உள்ளாகும் என்ற நிலை வந்த 2019களில் போரிஸ் ஜோன்சன் தமக்கு ஆதரவாக செயல்படவில்லை என ஆர்குரி தெரிவித்துள்ளார்.

நீண்ட நான்காண்டு காலம் மிக நெருக்கமான உறவு தங்களுக்கு இடையே நீடித்ததாக கூறும் ஆர்குரி,

ஆனால் தமக்கு தெரிந்த, தம்மை விரும்பிய அந்த நபர் தற்போது இல்லை மாறிவிட்டார் என்றே ஆர்குரி குறிப்பிட்டுள்ளார்.