நாட்டில் விஷத்தன்மை வாய்ந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் எப்லடொக்ஸின் என்ற வகையிலான புற்றுநோய் ஏற்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

13 கொன்டெயினர்கள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மேலும் 8300 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விற்பனைக்காக விடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.