இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வீசத்தொடங்கி உள்ளது. இதேபோல் தமிழத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக சென்னை, தஞ்சாவூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது.

கொரோனா பரவல் மீண்டும் தலைக்காட்டி வருவதால் முகக்கவசம் அணியுமாறு அரசு பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 3 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக வங்கி தற்காலிகமாக பூட்டப்பட்டது. வங்கி மூடப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.