மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* ஆண்டுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
* மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் வகையில் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு ரூ.10000 அரசு மானிய உதவி வழங்கப்படும்
* குடும்ப தலைவிகளுக்கு (பொதுப்பிரிவு) மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
* குடும்ப தலைவிகளுக்கு (எஸ்சி,எஸ்டி) மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்
* விதவைகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
* பொதுமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய மம்தா பானர்ஜி, இது அரசியல் அறிக்கை அல்ல; வளர்ச்சி சார்ந்த அறிக்கை என்றும், மக்களுக்கான அறிக்கை என்றும் குறிப்பிட்டார். சுகாதாரம் மற்றும் கல்வித் துறைக்கான பட்ஜெட் இரு மடங்காக அதிகரிக்கப்படும் என்றும் மம்தா தெரிவித்தார்.