காத்தான்குடியில் வீடொன்றில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக வீட்டின் உபகரணங்களும் உடமைகளும் எரிந்து சேதமடைந்துள்ளன.
காத்தான்குடி, முதலாம் குறிச்சி, மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் குடும்பத்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3.30 மணியளவில் வீட்டினுள் தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து, உறக்கத்திலிருந்து எழும்பி, அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.
இதனால் வீட்டில் இருந்த கேஸ் அடுப்பு, சலவை இயந்திரம் உட்பட வீட்டு உப கரணங்கள் மற்றும் வீட்டாரின் உடமைகள் என்பன முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
ஸ்தலத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.