அனுராதபுரம் -ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் சில சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் நேற்றிரவு(28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரவ்பொத்தானை- முக்கரவெவ பகுதியில் மதுபோதையில் சென்ற நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும், இதனை அடுத்து மதவாச்சி சந்தி பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதல் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், முப்படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் ,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
இரு குழுக்களுக்கிடையில் மோதல் - நான்கு பேர் காயம்
- Master Admin
- 01 March 2021
- (519)

தொடர்புடைய செய்திகள்
- 18 February 2021
- (545)
வீட்டுக்குள் புகுந்து முச்சக்கர வண்டி தீ...
- 16 June 2025
- (143)
இன்றைய தினம் மிதுன ராசி உட்பட 5 ராசிகளுக...
- 28 June 2024
- (213)
2024 இல் வரம் கொடுக்கும் சுக்கிரன்! கொட்...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்
- 17 June 2025
மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் எடுத்த விபரீத முடிவு
- 17 June 2025
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
- 17 June 2025
பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த காட்டுயானை
- 17 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.