தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் என்ற படத்தின் மூலமாக இவர் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். படத்துக்கு படம் மாறுபட்ட கதை களத்தை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் இவர் தற்போது பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லீயின் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவியது.
இது குறித்து தற்போது ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார். அதாவது அட்லி உடனான சந்திப்பு நட்பு ரதியான ஒன்று தான்.
அந்த சந்திப்பின் போது அட்லி தன்னுடைய உதவி இயக்குனரிடம் ஒரு கதை இருப்பதாக கூறினார். மேலும் அந்த படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் நான் இன்னும் படத்தின் கதையை முழுமையாக கேட்கவில்லை. ஊரடங்கு முடிந்த பிறகு இது குறித்து முடிவு செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படமும் ஊரடங்கு முடிந்த பிறகு அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.