இத்தாலி நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கமோக்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் கடலோரத்தில் இருக்கும் மலைக்குன்றில் இருந்த கல்லறைத் தோட்டம் சரிந்து கடலுக்குள் விழுந்தது.

கல்லறைத் தோட்டம் சரிந்து கடலில் விழுந்ததால் சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றது. இதனை பார்த்த உள்ளுர் மற்றும் வெளிநாட்டவர்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், மலைக் குன்றில் இருந்து சவப்பெட்டிகளும், மற்ற சிதைவுகளும் 160 அடிக்கு கீழ் மிதந்து கொண்டிருப்பது தெரிகிறது.

தற்போது சவப்பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.