பருத்தித்துறை- திக்கம் சந்திக்கு அண்மையில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தில் கற்கோவளத்தைச் சேர்ந்த பவிதரன் (வயது-30) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

விபத்து இடம்பெற்ற வீதியூடாக இன்று காலை பயணித்தவர்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.