ரொறன்ரோ, பீல் மற்றும் யோர்க் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இன்று மாணவர்கள் வகுப்பறைக் கற்றலுக்குத் திரும்புகின்றனர். கொரோனா தொற்றை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வகுப்புகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

ரொறன்ரோ பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ, பீல் மற்றும் யோர்க் பிராந்தியங்களில் ஆறு பாடசாலைச் சபைகளைச் சேர்ந்த பாடசாலைகள் இன்றைய தினம் வகுப்பறைக் கல்வியை ஆரம்பிக்கவுள்ளன.