தமிழகத்தில் இன்று புதிதாக 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 44 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 486 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 27 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 0
செங்கல்பட்டு - 45
சென்னை - 142
கோவை - 45
கடலூர் - 12
தர்மபுரி - 0
திண்டுக்கல் - 11
ஈரோடு - 15
கள்ளக்குறிச்சி - 1
காஞ்சிபுரம் - 11
கன்னியாகுமரி - 10
கரூர் - 4
கிருஷ்ணகிரி - 1
மதுரை - 15
நாகை - 9
நாமக்கல் - 4
நீலகிரி - 5
பெரம்பலூர் - 2
புதுக்கோட்டை - 4
ராமநாதபுரம் - 1
ராணிப்பேட்டை - 9
சேலம் - 9
சிவகங்கை - 1
தென்காசி - 13
தஞ்சாவூர் - 16
தேனி - 4
திருப்பத்தூர் - 0
திருவள்ளூர் - 21
திருவண்ணாமலை - 3
திருவாரூர் - 7
தூத்துக்குடி - 1
திருநெல்வேலி - 12
திருப்பூர் - 13
திருச்சி - 17
வேலூர் - 15
விழுப்புரம் - 4
விருதுநகர் - 1
மொத்தம் - 483