வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவரை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி அவரின் கழுத்தை கட்டி சுமார் 5 இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலியொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று அம்பலாங்கொடை திலகபுர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை நேரத்தில் வீட்டினுள் நுழைந்த சிலரால் குறித்த தாக்குதல் மற்றும் கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் என தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் இடம்பெறும் போது அவரின் மகள் மற்றும் மனைவி வீட்டில் இருந்துள்ளனர்.
கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவரின் மகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த குழுவினர் வீட்டினுள் நுழைவதற்கு முன்னதாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவை சேதப்படுத்தியுள்ளதை காணக்கூடியாக உள்ளது.
காயமடைந்த விற்பனை நிலைய உரிமையாளர் கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நள்ளிரவில் வீட்டொன்றில் புகுந்த கும்பல் செய்த கொடூரம்!
- Master Admin
- 10 February 2021
- (555)

தொடர்புடைய செய்திகள்
- 26 June 2025
- (67)
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு...
- 19 June 2025
- (212)
மீண்டும் உதயமாகும் குரு பகவான் ; ஜாக்பாட...
- 26 June 2025
- (82)
சிம்மத்தில் உருவான யோகம்: கடுமையான சிக்க...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை
- 26 June 2025
வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்
- 26 June 2025
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.