கட்டுநாயக்க விமானப்படை முகாமில் கடமையாற்றி வரும் விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் 100 கிராம் ஹெரோயின் மற்றும் 400 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய, நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப் பொருள் விற்பனையை கையாண்டு வந்த கைதி மற்றும் அவரது மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட கைதியின் வீட்டில் இருந்து சுமார் 02 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.