திருவாடானை அருகே உள்ள வடக்கு ஆண்டாவூருணியை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி செலின்(வயது 31). திருமணமாகி சுமார் 2 வருடங்கள் ஆன நிலையில் பிரசவத்தின்போது குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்து யாரிடம் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள ஊருணியில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக அவரது தாயார் சரோஜா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.