ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹலிய ரம்பக்வெல்ல இதனை தெரிவித்தார்.

அதனடிப்படையில் குறைந்தபட்ச சம்பளத்தை 25% இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.