பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உற்சாகமாக வரவேற்றுள்ளார்.
அத்துடன் நேற்று (வியாழக்கிழமை) வந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை, வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் Duchess of Cornwall கமிலா ஆகியோரும் வரவேற்றனர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் விதமாக ரெட் அரோஸ் (Red Arrows) மற்றும் அவர்களின் பிரான்ஸ் சகாக்களான லா பேட்ரூயில் (La Patrouille) லண்டனுக்கு மேலே ஒரு வான்சாகசத்தை நிகழ்த்தினர்.
விமானங்கள், வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை மீது நேரடியாக பறந்தது
ஜோன்சன் மற்றும் மக்ரோன் ஆகியோர் தங்கள் சந்திப்பின் போது, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பிரெக்ஸிட் வர்த்தக ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். இதன்போது, பிரதமர் ‘ஜூலை மாதம் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் ஒப்பந்தத்தை வரவேற்றார்’ என்று கூறினார்.
மேலும், இரு தலைவர்களும் பார்வையாளர்களுக்கான 14 நாட்கள் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எளிதாக்குவது குறித்தும், பிரித்தானிய குடிமக்கள் பிரித்தானியாவுக்குத் திரும்புவது குறித்தும் கலந்தாலோசித்தனர்.
1940 நாஜி படையெடுப்பிற்குப் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்ஸிற்கு போர்க்கால தலைவர் சார்லஸ் டி கோல்லின் 80ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரித்தானியா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.