கடந்த 10 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 30,691 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளான 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"2020 ஆம் ஆண்டில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையிலும், இறப்புகளின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளது. கடந்த வருடத்தில் பெப்ரவரி மாதத்தை தவிர்ந்த ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது கடந்த 10 வருடங்களில் பதிவான தொற்றாளர்களை விட குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது".